நீலகிரி மாவட்டம் உதகை அருகே இன்று (ஆகஸ்டு 10) சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விளையாட சென்றதால் விபரீதம்
நீலகிரி மாவட்டம், உதகை அருகே வடக்கு வனசரகத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வடமாநிலத் தொழிலாளி நிஷாந்த் என்பவரது 4 வயது மகள் சரிதா விளையாடிக் கொண்டுள்ளார்.
சிறுமி விளையாட சென்று வெகுநேரமாக வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் வீட்டிற்கு அருகே தேடிக்கொண்டே தேயிலை தோட்டத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு சிறுமி கழுத்தில் காயத்துடன் ரத்தம் கசிந்து மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
வனத்துறையினர் விசாரணை
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு சிறுத்தையின் காலடி தடம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோனிஷா
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்!