புத்தாண்டு கொண்டாட்டம் : ஈசிஆர் போறீங்களா… போலீசார் கடும் கட்டுப்பாடு!

Published On:

| By Kavi

2025ஆம் ஆண்டு நிறைவடைந்து நாளை மறுதினம் புத்தாண்டு பிறக்கிறது.2026ஆம் ஆண்டை வரவேற்று மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை, கிண்டி அர்பன் ஸ்கொயர் பார்க், ஈசிஆர் ரிசார்ட்டுகள் என நாளை இரவு சென்னையே களைகட்டும்.

ADVERTISEMENT

இந்தநிலையில் ஈசிஆர் பீச் ரிசார்ட்டுகளில் நாளை 12.30 மணிக்கு மேல் எந்தவித கொண்டாட்டங்களும் இருக்கக் கூடாது என்று செங்கல்பட்டு காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “புத்தாண்டு கொண்டாட்டம் 2026 முன்னிட்டு 31.12.2025 பிற்பகல் முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான ECR, OMR & GST மற்றும் மாவட்டத்தின் பலமுக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ADVERTISEMENT

மேலும் மாவட்டத்தில் மிக முக்கிய இடங்கள், கோயில்கள், தேவாலயங்கள் போன்றவற்றிற்கு ரோந்து காவலர்கள் நியமித்து தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். மொத்தம் 564 காவல அதிகாரிகள்/ஆளிநர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாடத்தின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்வருமாறு

ADVERTISEMENT

ECR, OMR மற்றும GST சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் Beach Resorts உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட்டமானது 01.01.2026 தேதி அதிகாலை 12.30 மணிக்கு மேல் எந்தவித நிகழ்ச்சியும் கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது.

பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தல் கூடாது.
இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் நபர்கள் மதுபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனஙகள் பறிமுதல் செய்யப்படும்.

கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகள முறையே திருவிடந்தை மற்றும் SSN கல்லூரி அருகில் வாகன தணிக்கை செய்யப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான உணவகம் / தங்கும் விடுதிகளில் முறையான முன்பதிவு பெற்ற நபர்கள் மட்டுமே மாமல்லபுரம் பகுதிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இரண்டு சக்கர வாகனத்தை இயக்குபவரும் பின் அமர்ந்துவரும் நபரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தும் நான்கு சக்கர வாகனத்தை இயக்குபவர் சட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். மீறுபவர்கள் மீது தக்க வழக்கு பதிவு செய்யப்படும்.

இளைஞர்கள் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பெண்களை கேலி மற்றும் கிண்டல் செய்வதை தவிர்க்க வேண்டும். மீறும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ECR, OMR மற்றும் GST சாலைகளில் புத்தாண்டு கொண்டாடும் விதமாக வாகன பந்தயம் மற்றும் சாகசத்தில் (Bike Race) ஈடுபடக்கூடாது. மீறும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்புவிக்கப்படும்.

மேலும் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் திருவிடந்தை முதல் கடப்பாக்கம் வரையிலான கடற்கரை பகுதிகளில் கடலில் இறங்கி குளிக்கவும் மற்றும் படகில் கடலுக்குள் அழைத்து செல்வதையும் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுத்து படகுகள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.

இந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடி, இந்த பண்டிகை நாட்களில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி கடந்து செல்ல காவல் துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் தங்கள பகுதிகளில் செயல்படும் பொழுதுபோக்கு தளங்கள் மற்றும் விடுதிகள் மேற்கூறிய விதிமுறைகளை மீறினால் அதுகுறித்தும், மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் வாகன சாகசங்களில் ஈடுபடுதல் போன்ற இளைஞர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் HELLO POLICE எண்.7200102104-க்கு எவ்வித தயக்கமுமின்றி தொலைபேசி அல்லது வாட்ஸ்ஆப் வாயிலாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share