மதுரை வண்டியூரில் நாளை (ஜூன் 22) இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. Nainar Nagendran thanks Edappadi Palaniswami
இந்தநிலையில், கோவையில் இன்று (ஜூன் 21) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முருகன் மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு விமரிசையாக நடைபெற வாழ்த்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் மிகச்சரியாக குறிப்பிட்டதைப் போல, விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவரின் ஜனநாயக உரிமை என்பதை எல்லோரும் உணர வேண்டும்.
எனவே, கட்சி பேதமின்றி, ஆன்மீக நோக்கத்துடன் நாளை நடைபெற இருக்கும் இம்மாநாட்டில் உலகெங்கும் இருக்கும் முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.