போரின் பிடியில் மத்திய கிழக்கு நாடுகள்.. தொடரும் விமான சேவைகள் ரத்து!

Published On:

| By Mathi

Chennai Airport

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்தால் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் கடந்த நான்கு நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக நீடிக்கும் இந்த விமான சேவை ரத்து, குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கான விமானங்களை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்த தொடர் ரத்துகளால் ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ADVERTISEMENT

துபாய்
அபுதாபி
ஷார்ஜா
குவைத்
மஸ்கட்
தோஹா

ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக, தமிழ்நாடு அரசு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஒரு பிரத்தியேக கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இந்த நடவடிக்கை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய சூழலில், வளைகுடா நாடுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடனும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share