2026-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது மார்ச் 15-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. Kamal Haasan invited
இந்தநிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்ட 543 கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருதுக்கான அகாடமி வாக்களிப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விழாவில் இருந்து கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்ததற்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள். Kamal Haasan invited
மொழி – தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை, “தமிழின் கலைப் பெருமை. இந்தியாவின் சினிமா பாரம்பரியம். உலக மேடையில் மீண்டும் ஒளி வீசியுள்ளார் கமல்ஹாசன். ஆஸ்கர் விழாவில் இருந்து வந்த இந்த பெருமைமிக்க அழைப்பு, தமிழர் திறமையின் சான்றாகும். அவரின் சாதனைக்கு என் மனமுழுவதும் நெகிழும் வாழ்த்துகள்” என்று பாராட்டியுள்ளார்.