முன் ஜாமீன் மனு தள்ளுபடி: கடத்தல் வழக்கில் கைதாகிறாரா பூவை ஜெகன்மூர்த்தி?

Published On:

| By Kavi

Is Poovai Jaganmoorthy being arrested

கடத்தல் வழக்கில் பூவை ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. Is Poovai Jaganmoorthy being arrested

காதல் திருமண விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவனை கடத்திய வழக்கில் முன் ஜாமீன் கேட்டு பூவை ஜெகன் மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று ஜூன் 27 விசாரணைக்கு வந்தது. 

அப்போது பூவை ஜெகன் மூர்த்தி சார்பில், சிறுவன் கடத்தலுக்கும் பூவை ஜெகன்மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் பலரும் உதவி கேட்பார்கள். அந்த வகையில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய மகேஸ்வரி கேட்ட உதவிக்கு, எதுவாக இருந்தாலும் சட்டப்படி செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார். எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது. 

காவல்துறை சார்பில், “சிறுவன் கடத்தலில் பூவை ஜெகன் மூர்த்தி தான் மூளையாக செயல்பட்டுள்ளார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கினால் சாட்சியத்தை கலைத்து விடுவார். அவரை கைது செய்ய அனுமதிக்க வேண்டும். அவருக்கும் ஏடிஜிபி ஜெயராமுக்கும் இடையிலான தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து இன்று மாலை உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜெயச்சந்திரன், முன் ஜாமீன் கேட்ட பூவை ஜெகன் மூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்தார். 

இந்த நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. Is Poovai Jaganmoorthy being arrested

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share