முருகர் மாநாட்டில் பங்கேற்க நடிகர் அதர்வா இன்று (ஜூன் 22) மதுரை வந்ததாக தகவல் பரவிய நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். is atharvaa attend murugar maanadu at madurai
இந்து முன்னணி கட்சி சார்பில் மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் ஆளுநர் ஆர். என்.ரவி, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யான் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களும் கலந்துகொள்கின்றனர். இதனால் மதுரை முழுவதும் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் அதர்வா, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் உள்ளிட்டோர் இன்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
முருகர் மாநாடு நடைபெறும் நிலையில், மதுரைக்கு வருகை தந்தது குறித்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அதர்வாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ”நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நான், நிமிஷா சஜயன் நடித்த டிஎன்ஏ திரைப்படம் இந்த வாரம் வெளியாகியுள்ளது. எனவே தியேட்டருக்கு விசிட் செய்து ரசிகர்களை சந்திப்பதற்காகவே இன்று மதுரை வந்துள்ளோம். முருகர் மாநாடு எங்கள் பயணத் திட்டத்தில் இல்லை” என்றார்.
தொடர்ந்து அவர், ”மதுரை வந்தாலே மீனாட்சியம்மன் கோயிலுக்கு வராமல் செல்ல முடியாது. அதன்படி இன்று கோயிலுக்கு வந்து அம்மனிடம் ஆசி பெற்றோம். இன்னும் நிறைய ஊர்களுக்கு சென்று ரசிகர்களை சந்திக்க இருக்கிறோம். மக்கள் மத்தியில் டிஎன்ஏ படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது. பலரும் படத்தை குடும்பமாக பார்க்க வருகின்றனர். அடுத்து பராசக்தி திரைப்படம் இன்னும் 2 மாதத்தில் முடிவடையும் என நினைக்கின்றேன்” என அதர்வா தெரிவித்தார்.