தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது. instructions for group 1 examiners
துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உட்பட குரூப்-1 பணியிடங்களில் 70 காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
குரூப்-1 பதவிக்கு 2.27 லட்சம் பேர், குரூப் 1 ஏ பதவிக்கு 6,465 பேர் என மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் நாளை தேர்வு எழுத உள்ளனர்.
இந்த முதல் நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப பதிவு எண் உள்ளிட்ட தகவல்களை tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்த நிலையில் நாளை தேர்வை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள் அந்தந்த மாவட்ட ஆட்சியளர்களால் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிடடிருக்கும் அறிவிப்பில்,
விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைப்புரிய வேண்டும்.
காலை 09.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும், 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.
தவறினால் அவர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டை / கடவுச்சீட்டு(PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் (PAN CARD) / வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளி நகலை கொண்டு வர வேண்டும்.
தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம்(Electronic Watches), புளூடூத்(Bluethooth) போன்ற மின்னணு உபயோகப்பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை.
தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மூலம் தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் சிறப்பு பேருந்து வசதிகள் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. instructions for group 1 examiners