கார்கில் இருட்டில் கழுகாகப் பாய்ந்த விமானம்… எதிரிகளை நடுங்க வைத்த “C-130J” – இந்திய விமானப்படை மாஸ் சாதனை!

Published On:

| By Santhosh Raj Saravanan

iaf c130j night landing kargil airstrip historic achievement tamil defence news

கார்கில் போர் நினைவுகள் நம் மனதில் நீங்காத இடம்பிடித்தவை. அதே கார்கில் மண்ணில், இதுவரை யாரும் செய்யத் துணியாத ஒரு சாகசத்தை இந்திய விமானப்படை (IAF) நிகழ்த்திக் காட்டியுள்ளது. பகலில் விமானத்தை இறக்குவதே சவாலான கார்கில் விமான ஓடுதளத்தில், முதன்முறையாக இரவு நேரத்தில் வெற்றிகரமாக விமானத்தை தரையிறக்கி வரலாறு படைத்துள்ளது இந்திய விமானப்படை.

வரலாற்றில் முதல் முறை: இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-130J சூப்பர் ஹெர்குலஸ் (Super Hercules) என்ற ராட்சத போக்குவரத்து விமானம், சமீபத்தில் கார்கில் விமான ஓடுதளத்தில் இரவு நேரத்தில் தரையிறக்கப்பட்டது. கார்கில் ஓடுதளம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் உள்ளது. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இந்தப் பகுதியில், பகல் நேரத்திலேயே விமானத்தை இயக்குவது மிகவும் கடினம். அப்படி இருக்கையில், இரவு நேரத்தில் எவ்வித வெளிச்சமும் இல்லாமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விமானத்தை இறக்கியது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ADVERTISEMENT

எப்படிச் சாத்தியமானது? இந்தச் சாகசத்திற்கு விமானிகள் பயன்படுத்திய உத்தி டெரைன் மாஸ்கிங்” (Terrain Masking). அதாவது, மலைகளுக்கு இடையே மிகத் தாழ்வாகப் பறந்து, எதிரிகளின் ரேடார்களுக்குச் சிக்காமல் மறைந்து செல்வது. மேலும், இரவு நேரத்தில் பார்ப்பதற்குக் கண் கண்ணாடிகள் (Night Vision Goggles) உதவியுடன் விமானிகள் இந்தச் சாதனையைச் செய்துள்ளனர்.

கருடா கமாண்டோக்களின் அதிரடி: இது வெறும் விமானப் பயிற்சி மட்டுமல்ல. இந்த விமானத்தில் இந்திய விமானப்படையின் மிகச்சிறந்த அதிரடிப் படையான கருடா கமாண்டோக்கள்” (Garud Commandos) பயணம் செய்தனர். எந்த நேரத்திலும், எத்தகைய சூழலிலும் எல்லையில் படைகளைக் குவிக்க முடியும் என்பதை இது எதிரிகளுக்கு உணர்த்தியுள்ளது.

ADVERTISEMENT

எதிரிகளுக்கு எச்சரிக்கை: லடாக் மற்றும் கார்கில் எல்லைப் பகுதிகளில் சீனா மற்றும் பாகிஸ்தான் படைகளின் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்த இரவு நேரத் தரையிறக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. அவசரக் காலத்தில் துருப்புகளையும், ஆயுதங்களையும் இரவோடு இரவாக எல்லைக்குக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது.

1999-ல் கார்கில் போரில் நாம் சிந்திய ரத்தம், இன்று நம் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தியுள்ளது. “எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எங்களால் வர முடியும்” என்று இந்திய விமானப்படை விடுத்திருக்கும் இந்த மௌன எச்சரிக்கை, எதிரி நாடுகளின் தூக்கத்தைக் கலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share