பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. Husband permission is not required
சென்னை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “எனது கணவரிடம் விவாகரத்து கேட்டு தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்தநிலையில் பஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த என்னிடம் கணவரின் கையெழுத்து கேட்டு மண்டல் பாஸ்போர்ட் அதிகாரி வற்புறுத்துகிறார். கணவரின் கையொப்பம் இல்லாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூன் 20) விசாரணைக்கு வந்தது.
அப்போது, “பெண்ணின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளபோது கணவரிடம் கையெழுத்து பெற்று வருமாறு பாஸ்போர்ட் அதிகாரி கூறுவது சரியல்ல.
கணவன் மனைவி இடையே பிரச்சினை இருக்கும் போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் கையெழுத்து பெறுவது மனுதாரரால் இயலாத காரியம்.
கணவரிடம் கையெழுத்து வாங்கி வருமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரி வற்புறுத்துவது, ஒரு பெண்ணை கணவனின் உடமையாகக் கருதும் இந்த சமூகத்தின் மனப்பான்மையையே காட்டுகிறது.
திருமணம் ஆகிவிட்டால் ஒரு பெண் தனது அடையாளத்தை இழந்துவிடுவதில்லை. எனவே பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் கையெழுத்து அவசியமில்லை” என்று உத்தரவிட்டுள்ளார். Husband permission is not required