மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான அனாராக் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, நம் நாட்டின் முதல் ஏழு நகரங்களில் (மும்பை, டெல்லி-என்சிஆர், பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, புனே மற்றும் கொல்கத்தா) குடியிருப்பு சொத்து விற்பனை (Home Sales) ஜனவரி-மார்ச் காலாண்டில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகரித்து 101,675 அலகுகளாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 93,280 அலகுகளாக இருந்தது. இருப்பினும், இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் குறைந்த அடிப்படை விளைவே ஆகும்.
முக்கிய அம்சங்கள்:
- விற்பனை அளவு: 1,01,675 அலகுகள் (ஆண்டுக்கு ஆண்டு 9% வளர்ச்சி)
- நிகர விற்பனை மதிப்பு: ரூ 1.51 லட்சம் கோடி (ஆண்டுக்கு ஆண்டு 6% சதவீத வளர்ச்சி)
Home Sales காலாண்டு சரிவு:
- முந்தைய காலாண்டுடன் (அக்டோபர்-டிசம்பர் 2025) ஒப்பிடும்போது, இந்தக் காலாண்டில் சந்தை சரிவைக் கண்டது.
- விற்பனை எண்ணிக்கையில் 7 சதவீத சரிவு (முந்தைய காலாண்டு: 1,08,970 அலகுகள்)
- மொத்த மதிப்பில் 6 சதவீத சரிவு (முந்தைய காலாண்டு: சுமார் ரூ 1.60 லட்சம் கோடி)
மேற்கு ஆசிய பதட்டங்களின் தாக்கம்:
இந்திய குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறை நீண்ட காலத்திற்கு வலுவான அடிப்படைகளைக் கொண்டிருந்தாலும், ஈரான் போர் மற்றும் மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் குறுகிய கால எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதிகரித்து வரும் எண்ணெய் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலைகள் வாங்குபவர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மார்ச் மாதத்தில் விற்பனை மற்றும் வாங்குபவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டது. நிச்சயமற்ற தன்மை காரணமாக மேற்கு ஆசியாவைச் சேர்ந்த சில முதலீட்டாளர்கள் முதலீடுகளை ஒத்திவைத்தனர்.
50 முக்கிய நகரங்களில் விற்பனை:
நம் நாட்டின் 50 முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டு வீட்டு விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையில் 3 சதவீதம் குறைந்து 6.14 லட்சம் யூனிட்டுகளாக இருந்தது. அதே சமயம், மதிப்பின் அடிப்படையில் இது 16 சதவீதம் அதிகரித்து ரூ. 8.46 லட்சம் கோடியாக இருந்தது. மதிப்பின் அடிப்படையிலான விற்பனை, 2024ஆம் ஆண்டில் ரூ. 7,29,112 கோடியிலிருந்து 2025ஆம் ஆண்டில் ரூ. 8,46,648 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 16 சதவீத வளர்ச்சியைக் காட்டுகிறது.
