நீண்ட காலத்திற்கு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 5 ஆண்டு நிலையான வைப்பு (Fixed Deposit – FD) திட்டம் ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக இருக்கலாம். நிலையான வைப்புகளில் முதலீடு செய்வதற்கு நிறைய நன்மைகள் உள்ளன. மூத்த குடிமக்கள் மற்றும் மிக மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்கள் (Returns) வழங்கப்படுகின்றன. நீங்கள் உத்தரவாதமான வருமானத்தைப் பெறுவீர்கள்.
மேலும், உங்கள் பணம் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்படாததால் அது பெரும்பாலும் பாதுகாப்பாகவே இருக்கும். இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ. 5,00,000 டெபாசிட் செய்தால் ஐந்து ஆண்டுகளில் ரூ. 2,07,389 வரை மொத்த வருமானத்தைப் பெறலாம். இந்த வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று இங்கே பார்ப்போம்.
வழக்கமான முதலீட்டாளரின் வருமானக் கணக்கீடு: (Income Calculator)
ஒரு சராசரி வாடிக்கையாளர் 3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு பேங்க் ஆஃப் பரோடாவின் 5 ஆண்டு நிலையான வைப்பில் தற்போது 6.30% வட்டியைப் பெறலாம். எனவே பேங்க் ஆஃப் பரோடா FD கால்குலேட்டரைப் பயன்படுத்தி 6.30% வட்டியில் ரூ. 5 லட்சம் முதலீட்டிற்கான வருமானம் கணக்கிடப்படும்போது, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் வருமானம் ரூ. 1,83,450 ஆக இருக்கும். அதாவது, ஒரு சராசரி வாடிக்கையாளரிடம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமாக ரூ. 6,83,450 இருக்கும்.
மூத்த குடிமக்கள் மற்றும் மிக மூத்த குடிமக்களுக்கான வருமான கணக்கீடு:
நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்தால், பேங்க் ஆஃப் பரோடா வழங்கும் 5 ஆண்டு FD-க்கு 6.90 சதவீத வட்டி உங்களுக்கு வழங்கப்படும். இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு மூத்த குடிமகன் ரூ. 2,03,921 வருமானத்தைப் பெறுவார். கணக்கீட்டின்படி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களிடம் மொத்தமாக ரூ. 7,03,921 நிதி இருக்கும். நீங்கள் மிக மூத்த குடிமக்கள் பிரிவில் முதலீடு செய்பவராக இருந்தால் இந்த முதலீட்டிற்கு 7 சதவீத வட்டி பெறுவீர்கள். இதன் அடிப்படையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் ரூ. 2,07,389 வருமானத்தைப் பெறுவீர்கள். அதாவது, முதிர்வு காலத்தில் உங்களிடம் ரூ. 7,07,389 நிதி இருக்கும்.
