எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.2.24 லட்சம் பறிமுதல்!

Published On:

| By Jegadeesh

எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்திய நிலையில் ரூ.2.24 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள எழிலகத்தில் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறைகளுக்கு சொந்தமான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் அரிப்பு தடுப்பு பிரிவின் உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 5) இரவு முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ. 2.14 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், உதவி செயற்பொறியாளர் பாஸ்கரை விசாரணைக்காக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

கடல் அரிப்பு தடுப்பு பிரிவின் உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன் மீது லஞ்சம் வாங்குவதாக தொடர் புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அஞ்சல் துறை: நேரடி முகவர்கள், கள அலுவலர்களுக்கு நேர்காணல்! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share