முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான தயாநிதி மாறன் தனது கோடீஸ்வர சகோதரர் கலாநிதி மாறன், காவிரி கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். dhayanithi maran send lawyer notice to kalanithi maran
இதுதொடர்பாக மணி கண்ட்ரோல் இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள செய்தியில், கடந்த ஜூன் 10ஆம் தேதி தேதியிட்ட வக்கீல் நோட்டீஸில் சன் டிவி பங்குகளை கையாளுவதில் 2003ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சகோதரர் கலாநிதி மாறன், காவிரி கலாநிதி மாறன் உள்பட 7 பேருக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபரில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. தொடர்ந்து கோடீஸ்வர சகோதரரான கலாநிதி மாறன், பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, தற்போது இரண்டாவது முறையாக சிவில், குற்றவியல், ஒழுங்குமுறை மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனக் கூறி வக்கீல் நோட்டீஸை தயாநிதிமாறன் அனுப்பியுள்ளார்.