மக்களே அலர்ட்… இன்று மதியம் உருவாகிறது புயல் – வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்!

Published On:

| By Minnambalam Login1

cyclone alert tamilnadu

வங்கக்கடலில் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயல் உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 29) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு திசையில் 360 கி.மீ தூரத்திலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 400 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டது.

 

இது அடுத்த மூன்று மணி நேரத்தில் (அதாவது இன்று மதியம் 1 மணி அளவில்) புயலாக வலுப்பெறக்கூடும். மேலும், வடமேற்கு திசையில் நகரந்து காரைக்கால் – மகாபலிபுரம் இடையே, நாளை (நவம்பர் 30) புயலாக கரையைக்கடக்கும். அப்போது அதன் வேகம் மணிக்கு 70-80 கி.மீ இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் உருவானால், அதற்கு ‘ஃபெங்கல்’ என்று பெயரிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

இதை எதிர்பார்க்கவே இல்லையே… விர்ரென ஏறிய தங்கம் விலை!

கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு கிராக்கி: விவசாயிகள் மகிழ்ச்சி!

புதுக்கோட்டை: பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share