மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசன் சென்னையில் இன்று (செப்டம்பர் 21) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் மட்டும் விமர்சனங்கள் எழுவதில்லை. நடிக்க வருபவர்கள் மீதும் விமர்சனங்கள் வரும்.. இவன் எல்லாம் என்னைக்கு நடிகராக போறான் என்பார்கள்..
விஜய்க்கு கூடுகிற கூட்டம் எல்லாம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது. இது அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும். இது விஜய்க்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும். நல்ல பாதையில் செல்லுங்கள். தைரியமாக முன்னேறுங்கள்.
மக்களுக்காக செய்யுங்கள் என்பது தான் எல்லா அரசியல்வாதிகளுக்கும் வைக்கும் வேண்டுகோள். நான் குடிமகனாக இருந்தாலும் இதே வேண்டுகோளை முன் வைக்கிறேன் என்றார்.