திமுக கூட்டணியில் இருந்தாலும் நெருக்கடி… திருமா ஓபன்டாக்!

Published On:

| By Selvam

Thirumavalavan Open Talk in Trichy

ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் இருந்தாலும் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த காவல்துறை அனுமதிப்பதில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். Thirumavalavan Open Talk in Trichy

திருமாவளவன் தலைமையில் திருச்சியில் ஜூன் 14-ஆம் தேதி மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைபெற்றது. Thirumavalavan Open Talk in Trichy

இந்த பேரணியில் திருமாவளவன் பேசும்போது,

”யார் முதலமைச்சர் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த கவலையில்லை. திமுகவிடம் விசிக சிக்கிக்கொண்டு தவிக்கிறது என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியே தீர்மானிப்பவர்கள் விசிக.

Thirumavalavan Open Talk in Trichy


இந்திய தேசிய அரசியலை கூர்மைப்படுத்துகிறவர்கள் விசிக. இதன் வலிமையை உணராதவர்கள், திருமாவுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை, பேரம் பேச தெரியவில்லை, பிளாக் மெயில் பண்ண தெரியவில்லை, துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்க மறுக்கிறார் என்கிறார்கள். Thirumavalavan Open Talk in Trichy

முதல்வர் பதவியை பற்றியே நாங்கள் கவலைப்படவில்லை. துணை முதல்வர் எதற்கு? பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள் என்று தான் அம்பேத்கர் வழிகாட்டியிருக்கிறார். அதுதான் அதிகாரம் உள்ள பதவி. Thirumavalavan Open Talk in Trichy

தலித்துகள், பழங்குடிகள், இந்த மண்ணின் பூர்வீக குடிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான் அம்பேத்கர் கண்ட கனவு. எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.

யூடியூபில் உட்கார்ந்துகொண்டு சிலர் எங்களுக்கு அட்வைஸ் செய்கிறார்கள். 35 வருடம் அரசியலில் இருக்கிறோம். 10 ஆண்டுகாலம் தேர்தல் அரசியல் வேண்டாம் என அரசியல் செய்தவர்கள். இந்த தில்லு முல்லு தேர்தல் அரசியலில் 25 ஆண்டுகள் நாங்கள் தாக்குபிடித்து நிற்கிறோம். சமகாலத்தில் எங்களோடு புறப்பட்டவர்கள் வழிதவறி சென்று விட்டார்கள். இன்றைக்கு தமிழக அரசியலில் விசிக தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறது.

இன்றைக்கு சமூக, அரசியல், பொருளாதார, கலை உலக தளத்தில் தலித்துகள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்றால் விசிகவின் எழுச்சி தான் அதற்கு காரணம்.

திருச்சியில் இந்த பேரணி நடத்துவதற்கு முதலில் காவல்துறை அனுமதி தரவில்லை. நாம் ஆளும்கட்சி கூட்டணியில் தான் இருக்கிறோம். தமிழகம் முழுவதும் விசிக கொடிக்கம்பங்களை காவல்துறை அகற்றுகிறார்கள். ஆனால், மற்ற கட்சி கொடிக்கம்பங்களை அகற்றுவதில்லை.
இவ்வளவு நெருக்கடிகளையும் தாங்கிக்கொண்டு இந்த களத்தில் நிற்கிறோம்.

கொடியேற்ற முடியவில்லை, பொதுக்கூட்டம், பேரணி, மாநாடு நடத்த முடியாமல் நெருக்கடிகள் கொடுக்கிறார்கள். கூட்டணியில் இருந்தாலும் நம்முடைய கொடியை மட்டும் அகற்றினார்கள்.

ஏன் திமுகவை ஆதரிக்கிறோம்? கூட்டணியை விட்டு வெளியே வந்தால் எங்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டு வரப்போகிறதா? மாநில அரசாலும் மத்திய அரசாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் யாருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை.

அதனால் ஒரு முடிவை தெளிவாக எடுத்து பயணிக்கிறோம். எங்களுக்கான காலம் கனியும் வரை நாங்கள் காத்திருப்போம். திமுகவுடன் நாங்கள் கொண்டிருக்கிற உறவு கொள்கை உறவு. தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை செய்து முடிவு செய்துகொள்வோம்.

திமுக அரசோடு எங்களுக்கு இருக்கும் விமர்சனங்களை தாண்டி தேர்தல் உறவை வைத்துக்கொள்கிறோம் என்றால், அது தொலைநோக்கு பார்வையுடன் கூடிய ஒரு கொள்கை முடிவு” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Thirumavalavan Open Talk in Trichy
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share