திருவள்ளுவர் தினத்தில் தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
திருவள்ளுவர் தினத்தை (ஜனவரி 16) முன்னிட்டு தமது சமூக வலைதளப் பக்கங்களில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி:
அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல் – வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்!
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு- திருவள்ளுவர்
- சமூக நீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல்.
- வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள்
- இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்
- தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள்
இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி!
