மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை இன்று ஜூன் 16-ந் தேதி மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி தொடங்கும். லடாக், ஜம்மு, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் 2026-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி தொடங்கும். Caste-Based Census to Begin on March 1, 2027
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில், ஒவ்வொரு வீட்டின் நிலைமைகள், சொத்துக்கள் மற்றும் வசதிகள் சேகரிக்கப்படும். அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதாவது, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவ்வொரு நபரின் சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பு இன்று ஜூன் 16-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி தொடங்கும். லடாக், ஜம்மு, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் 2026-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி தொடங்கும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக, சுமார் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் சுமார் 1.3 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொடங்கியதிலிருந்து 16வது மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகான 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு செல்பேசி செயலியைப் பயன்படுத்தி டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் நடத்தப்படும். சுய கணக்கெடுப்பு வசதியும் மக்களுக்குக் கிடைக்கும்.
முன்னதாக டெல்லியில் நேற்று ஜூன் 15-ந் தேதியன்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்னேற்பாடுகளை மத்திய உள்துறை செயலாளர், இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை ஆணையர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.