தமிழ்நாட்டில் தமக்கு அதிகமாக பிடித்தது ‘சாம்பார் சோறு’ மற்றும் ராமேஸ்வரம் நகரம் ஆகியவைதான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். Amit Shah Sambar Rice Tamil Nadu
தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதாவது: பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார் என்பது இன்னமும் முடிவாகவில்லை. இது தொடர்பாக விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அதிகமாக செய்துவிட்டது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் நிலையில் எங்களுக்கு பொறுப்புகளும் அதிகமாகும்.
தமிழக தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவில் இருந்துதான் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும். அதில் பாஜகவும் இடம் பெறும்.
தமிழ்நாட்டில் எனக்கு பிடித்தது சாம்பார் சோறு. எனக்கு பிடித்த நகரம் ராமேஸ்வரம். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.