ADVERTISEMENT

அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் சத்குரு… ஈஷா சிவராத்திரியில் அமித்ஷா

Published On:

| By Selvam

கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக இன்று (பிப்ரவரி 26) நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். Amit Shah praises Jaggi Vasudev

நிகழ்ச்சியில் அமித்ஷா பேசும்போது, “மகாசிவராத்திரி திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு சோமநாதத்திலிருந்து கேதார்நாத் வரை, பசுபதிநாத் முதல் ராமேஸ்வரம் வரை, காசி முதல் கோயம்புத்தூர் வரை, முழு தேசமும் சிவமயமாக இருக்கிறது.

ADVERTISEMENT

பிரயாக்ராஜில் நடைபெற்ற மகாகும்பமேளா இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், பக்தியின் மகாகும்பமேளா இன்று கோவையில் எனக்கு முன்பாக காட்சியளிக்கிறது. ஈஷா யோகா மையம் என்பது, ஒரு புனிதத் தலம் மட்டுமல்ல, அது யோகா, சாதனா, பக்தி, மனந்திரும்புதல் மற்றும் விடுதலைக்கான இடமாகும்.

இங்கு வருகை தரும் போது, ​​வாழ்க்கையின் கடைசி இலக்கு ‘சிவமயத்தை’ அடைவது என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். இளைஞர்களை எல்லாம் வல்ல இறைவனுடன் இணைக்கும் ஒரு மையமாக ஈஷா திகழ்கிறது.

ADVERTISEMENT

சத்குரு ஜக்கி வாசுதேவுடன் இணைந்து மண் காப்போம் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். நமது மண்ணையும், சுற்றுச்சூழலையும் அவர் பாதுகாத்துள்ளார்.

அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒன்றாக இணைப்பதன் மூலம், தியானமும் சனாதனமும் மூடநம்பிக்கைகள் அல்ல, அவை முற்றிலும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டவை என்பதை சத்குரு ஜக்கி வாசுதேவ் நிரூபித்துள்ளார். சிவனே நித்தியமானவர், உணர்வு பூர்வமானவர் என்பதை சத்குரு ஜக்கி வாசுதேவ் அனைவருக்கும் உணர்த்தியுள்ளார்” என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். Amit Shah praises Jaggi Vasudev

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share