அப்துல்கலாமின் ஆலோசகரும், அரசியல் விமர்சகருமான பொன்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பல தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது.
இது குறித்து அதிமுக ஐடி விங் எக்ஸ் பதிவில், “தமிழகப் பெண்களை “விபச்சாரிகள்” என மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததோடு அல்லாமல், அதற்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என பேசியுள்ளார் திமுக ஆதரவாளர் பொன்ராஜ்.
திமுக-வினரின் காலங்காலமாக உள்ள பெண்கள் குறித்த கேவலமான, அருவருப்பான பார்வையை மீண்டும் ஒருமுறை உறுதி படுத்தி உள்ளார் பொன்ராஜ்.
பெண்களுக்கு எதனால் 5 ஆண்டு திமுக ஆட்சியில் பாதுகாப்பு பாதாளத்திற்கு சென்றது என்பதற்கு இப்படிப்பட்ட ஆபாச பேச்சுகளே பதில்.
பெருமதிப்பிற்குரிய ஐயா அப்துல் கலாம் அவர்களின் உதவியாளர் என தன்னை அடையாளப்படுத்தும் இந்த நபரின் பேச்சுகள், கண்ணியத்தின் உறைவிடமாம் ஐயா கலாம் அவர்களின் புகழுக்கே இழுக்கை ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது.
கடந்த 5 ஆண்டுகளாக தங்களை ஆட்சி செய்தவர்கள் எப்படிப் பட்ட நபர்கள் என்பதை தமிழக பெண்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.வி. சேகர், பொன்ராஜில் துவங்கி இணையத்தில் போலி பெயருடன் திரியும் பல ஆபாசவாதிகளின் முகத்திரைகள் விரைவில் கிழித்தெறியப்படும்.
மகளிர் வாழ வேண்டும் என்றால், திமுக வீழவேண்டும்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
