37 ஆண்டுகளுக்கு பிறகு அகமதாபாத்தில் மீண்டும் கோர சம்பவம்… விமான விபத்து டைம் லைன்!

Published On:

| By Selvam

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் அருகே விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் பயணித்த 40 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் நடைபெற்ற ஒரு மிகப்பெரிய கோர விபத்தாக இந்த விமான விபத்து அமைந்துள்ளது. after 27 years plane crash in ahmedabad

இந்தியாவில் ஏற்பட்ட விமான விபத்துக்கள்:

1973 மே 31: டெல்லி அருகே இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 48 பேர் பலியாகினர்.

1976 அக்டோபர் 12: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 95 பேர் பலியாகினர்.

1978 ஜனவரி 1: மும்பையில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம், விமானியின் அறையில் இருந்த விமானக் கருவி செயலிழந்ததால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 213 பேர் உயிரிழந்தனர்.

1982 ஜூன் 21: ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர்

1988 அக்டோபர் 19: மும்பையிலிருந்து அகமதாபாத்திற்குச் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், அகமதாபாத் விமான நிலையத்தை நெருங்கும் போது விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 135 பேரில் 133 பேர் கொல்லப்பட்டனர்.

1990 பிப்ரவரி 14: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 92 பேர் உயிரிழந்தனர்.

1993 ஏப்ரல் 26: அவுரங்கபாத்தில் விமான ஓடுபாதையில் டிரக் மீது விமானம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 55 பேர் உயிரிழந்தனர்.

1996 நவம்பர் 12: டெல்லியில் இருந்து சவுதி அரேபியாவின் தெஹ்ரானுக்குச் சென்று கொண்டிருந்த போயிங் 747 விமானமான சவுதியா விமானம் மற்றும் கஜகஸ்தானின் சிம்கெண்டிலிருந்து டெல்லிக்குச் வந்து கொண்டிருந்த இலியுஷின் இல்-76 என்ற கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை டெல்லிக்கு மேற்கே சுமார் 100 கிமீ தொலைவில் உள்ள சார்கி தாத்ரி நகரின் மீது மோதின. இந்த விபத்தில் இரண்டு விமானங்களிலும் இருந்த 349 பேரும் கொல்லப்பட்டனர். இது உலகின் மிக மோசமான நடுவானில் மோதிய விபத்தாக அமைந்தது.

2000 ஜூலை 17: ஏர்லைன்ஸ் ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில் 55 பயணிகள் மரணம்.

2010 மே 22: துபாய்- மங்களூரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர்.

2010 ஆகஸ்ட் 7: துபாய்- கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.

2016 ஜூலை 22: இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 விமானம் வங்காள விரிகுடாவில் விழுந்து நொறுங்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.

2019 ஜூன் 3: இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 விமானம், தரைக்கட்டுப்பாட்டுத் துறையுடனான தொடர்பை இழந்ததால், அருணாச்சலப் பிரதேசத்தில் மலைப்பாங்கான பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.

2020 ஆகஸ்ட் 7: துபாயிலிருந்து கோழிக்கோடு நோக்கி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

தற்போது, 27 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மீண்டும் ஒரு மிகப்பெரிய கோரமான விமான விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. after 27 years plane crash in ahmedabad

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share