ஈரானில் தவிக்கும் 6,000 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை- நயினார் நாகேந்திரன்

Published On:

| By Minnambalam Desk

Iran TN Fishermen

ஈரான் நாட்டில் தவிக்கும் தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 6,000-க்கும் அதிகமான மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். Action to Rescue 6,000 Tamil Nadu Fishermen Stranded in Iran – Nainar Nagendran
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் கூறுகையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே போர் நிலவும் இவ்வேளையில், ஈரான் நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இருக்கின்றனர் என்ற செய்தி அறிந்ததும் அவர்களைப் பற்றியான தகவல்களை சேகரித்திட முதற்கட்டமாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கலந்தாலோசித்தேன்.

மேலும், இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சரிடமும் முறையிட்டு நமது இந்திய மீனவர்களைப் பாதுகாப்புடன் மீட்டுக் கொண்டுவர தமிழக பாஜக உறுதியுடன் செயல்படும் என்றார்

ஆபரேஷன் சிந்து

இஸ்ரேல் தாக்குதலால் ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு Operation Sindhu நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ஈரானில் இருந்து நேற்று ஜூன் 20-ந் தேதி 110 மாணவர்கள் மீட்கப்பட்டனர். இன்று மேலும் 517 இந்தியர்கள் 2 விமானங்களில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உறவினர்களின் வேண்டுகோள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share