அதிமுகவில் 2 மாவட்டச் செயலாளர்கள் விடுவிப்பு : எடப்பாடி உத்தரவு!

Published On:

| By Kavi

2 district secretaries in AIADMK removed

அதிமுகவில் 2 மாவட்டச் செயலாளர்களை விடுவித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 2 district secretaries in AIADMK removed

வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளராக இருந்த வெங்கடேஷ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏவும் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் புரசை பாபு வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜான் தங்கம் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய மாவட்ட செயலாளராக ஜெயசுதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார். 2 district secretaries in AIADMK removed

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share