ADVERTISEMENT

’மகளிர் உரிமைத் தொகை’- ’மூடநம்பிக்கை’.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி விமர்சனம்

Published On:

| By Mathi

Congress Praveen

தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மட்டுமே தேர்தலில் வெற்றியைத் தரும் என நம்புவது ‘மூடநம்பிக்கை‘ என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்துள்ளார்.

பிரவீன் சக்கரவர்த்தி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டதக்கது ஆனால், அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன; 5 தோல்வியடைந்தன. இவ்வாறு பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share