பீர் தொழிற்சாலையில் 60 வாக்காளர்கள்- வாக்குகள் ‘திருட்டு’- ராகுல் காந்தி வெளியிட்ட அடுக்கடுக்கான ஆதாரங்கள்!

Published On:

| By Mathi

Rahul Gandhi Fake Voters

மக்களவைத் தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக, வாக்குகளை திருடி இருப்பதாக அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi Vs Election Commission of India) திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

டெல்லியில் இன்று ஆகஸ்ட் 7-ந் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியதாவது:

ADVERTISEMENT
  • மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல மாநில சட்டமன்ற தேர்தல்களில் களநிலவரம், கருத்து கணிப்பு, எக்ஸிட் போல் ஆகியவை ஒரே மாதிரியாகவும் தேர்தல் முடிவுகள் மட்டும் தலைகீழாக மாறியும் இருந்ததற்கு காரணம் வாக்குகள் திருட்டுதான்.
  • கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 1 லட்சம் வாக்காளர்கள் மோசடியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • அத்தொகுதியில் ஒரே முகவரியில் 10,452 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
  • புதிய வாக்காளர் படிவத்தை 33,692 பேர் முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர்
  • கதவு எண், தெரு எண் பூஜ்ஜியம் என குறிப்பிட்டு ஆயிரக்கணக்கான வாக்காளர்களை சேர்த்துள்ளனர்.
  • குர்கிராத் சிங் டாங் என்பவர் பெயர் 4 வாக்குச் சாவடிகளில் ஒரே போட்டோ, ஒரே பெயருடன் இடம் பெற்றிருக்கிறது.
  • போலி மற்றும் தவறான முகவரிகள் மூல்ம் 40,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
  • தவறான போட்டோக்களுடன் 4132 பேர் வாக்காளர்களாக்கப்பட்டுள்ளனர்.ஒரே படுக்கை கொண்ட வீட்டில் மட்டும் 48 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்
  • ஏதாவது ஒரு ஆங்கில எழுத்தை தந்தை பெயராக குறிப்பு ஆயிரக்கணக்கான வாக்காளர்களை சேர்த்துள்ளனர்.
  • பீர் தொழிற்சாலை முகவரியில் மட்டும் 68 வாக்காளர்கள் இருப்பதாக சொல்கிறது வாக்காளர் பட்டியல்.
  • முதன் முறை வாக்காளராக ராணி என்ற மூதாட்டி ஒருவரை சேர்த்துள்ளனர்; 70 வயதுக்கு மேற்பட்ட பலர் முதல் முறை வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்
  • வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் போட்டோக்கள் இல்லை.
  • தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் இருந்துதான் இவை எடுக்கப்பட்டவை.
  • தேர்தல் ஆணையம் என் குற்றச்சாட்டுகளை மறுக்காது; என் மீது நடவடிக்கையும் எடுக்காது; ஏனெனில் தேர்தல் ஆணையத்துக்கும் நான் சொல்வது அனைத்தும் உண்மை என தெரியும்.
  • என்னுடைய குற்றச்சாட்டுகளையே இந்திய தேர்தல் ஆணையம் என்னுடைய வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம்
  • இந்திய தேர்தல் ஆணையம், வாக்குகளைத் திருடுவதற்கு பாஜகவுக்கு உதவுகிறது.
  • கர்நாடகா வாக்காளர் பட்டியல் முறைகேடுகளைக் கண்டித்து ஆகஸ்ட் 8-ந் தேதி பேரணி நடைபெறும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share