நிதியமைச்சரை சந்தித்தேன்… விஜய் மல்லையா ஓபன் ஸ்டேட்மென்ட்!

Published On:

| By Minnambalam Desk

Vijay Mallya says I told Jaitley before leaving

கடந்த 2016ஆம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச்சென்ற மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா, கடந்த ஜூன் 5-ஆம் தேதி நான்கு மணி நேர பாட்காஸ்ட் (Podcast) வாயிலாக, பல வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக பேசினார். Vijay Mallya says I told Jaitley before leaving

இது 2013-க்குப் பிறகு அவர் அளித்த முதலாவது நேர்காணல் ஆகும். 2012 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில், நான்கு முறை கடனைத் தீர்க்க முயற்சி செய்தேன். ஆனால், வங்கிகள் ஏற்க மறுத்தன, என அவர் தெரிவித்தார்.

பாட்காஸ்ட் தொகுப்பாளர் ராஜ் ஷமனியிடம், விஜய் மல்லையா அளித்த நேர்காணலில்,

“2008-ல் Air Deccan-ஐ கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உடன் இணைத்ததும், அதன் விளைவாகவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) உள்ளிட்ட பல அரசாங்க வங்கிகள் கிங்ஃபிஷருக்கு கடன் வழங்கியது.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நேரடியாக எஸ்பிஐ-யிடம் கடன் வாங்கவில்லை. நான் ஒருபோதும் நேரடியாக எந்தவொரு வங்கியிடமும் ஒரு ரூபாய்க்கும் கடன் வாங்கவில்லை. கடன் வாங்கியது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ். ஆனால், நான் தனிப்பட்ட உத்தரவாதம் கொடுத்தேன். ஒரு திருடன் தனிப்பட்ட உத்தரவாதம் கொடுப்பானா?

நான் ஹைதராபாத்திலுள்ள எஸ்பிஐ பயிற்சி நிலையத்தில் எஸ்பிஐ தலைவரை சந்தித்து கடன்கள் தொடர்பான தீர்வுகளை முன்மொழிந்தேன். ஆனால், அதனை அவர் ஏற்காமல் 14,000 கோடி ரூபாயை முழுமையாக கட்டவேண்டும் என்று என்னுடைய கோரிக்கையை நிராகரித்தார்.

என்னுடைய சொத்துக்களையும், பங்குகளையும் கையளித்தேன். நான் பணத்தை செலுத்த விரும்பவில்லை என்று ஒருபோதும் சொல்லவில்லை. தீர்வு தேடுவதுதான் என் நோக்கம்

லண்டனுக்கு புறப்படுவதற்கு முன்பாக அன்றைய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் பேசிவிட்டு தான் சென்றேன். அப்போது, வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யுமாறு ஜேட்லியிடம் கேட்டுக்கொண்டேன்” என்று தெரிவித்தார்.

பாட்காஸ்ட் வெளியாகிய பிறகு, எக்ஸ் தளத்தில் மல்லையா வெளியிட்ட பதிவில்,
“நான் 9 ஆண்டுகளுக்கு பிறகு பேசுகிறேன். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உண்மைகளை வெளிப்படுத்தும் நேரம் இது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குமூலம், அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்:

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி:

2018 ஆம் ஆண்டு ஜெட்லி ஒரு குற்றவாளியுடன் கூட்டுசேர்ந்ததாகவும், மல்லையா நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுப்பதில் தவறியதாகவும் குற்றம்சாட்டி அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தேன் என்பதை இப்போது நினைவு கூர்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சிதாராம் யெச்சூரி, மல்லையாவின் குறிப்பு அரசாங்கத்தை சிக்கலில் ஆழ்த்துவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். அரசாங்கம் இன்னும் எத்தனை தகவல்களை மறைக்கிறது?

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்

மல்லையா நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன் நிதியமைச்சரை சந்தித்தார். இந்த சந்திப்புகளில் என்ன நடந்தது? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


2024ம் ஆண்டு பிப்ரவரியில், விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 6,200 கோடி ரூபாய் வங்கிகளுக்கு ஏற்கனவே வசூலாகிவிட்டது. ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த டிசம்பரில் மக்களவையில், 14,000 கோடி ரூபாய் வசூலானதாக கூறியிருந்தார்.

மல்லையா மீது மோசடி (cheating), குற்ற சதி (criminal conspiracy), பணப்புழக்கம் (money laundering), நிறுவன சட்டங்கள் மீறல் உள்ளிட்ட வழக்குகள் இன்னும் தொடர்கின்றன. Vijay Mallya says I told Jaitley before leaving

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share