ADVERTISEMENT

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு ‘முரசொலி செல்வம்’ விருது

Published On:

| By Mathi

A S Panneerselvan

மூத்த பத்திரிகையாளரும் திராவிடர் இயக்க ஆய்வாளரும் தமிழ்நாடு அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் தலைமை இயக்குநருமான ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு முரசொலி அறக்கட்டளையின் ‘முரசொலி செல்வம்’ விருது வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக முரசொலி அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை: சென்னை அண்ணா அறி­வா­ல­யம், கலை­ஞர் அரங்­கத்­தில் கடந்த 21.10.2024 அன்று நடைபெற்ற முர­சொலி செல்­வம் படத்­தி­றப்பு’ நிகழ்ச்­சி­யில், “முர­சொலி செல்­வம் அவர்­கள் பெய­ரால் ஆண்­டு­தோ­றும் விருது வழங்­கு­வது; அதனை ஒவ்­வொரு ஆண்­டும் நடத்­தப்­ப­டும் திமுக முப்­பெ­ரும் விழா நிகழ்ச்­சி­யில் வழங்­கப்­ப­டும்” என திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வ­ரும் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ADVERTISEMENT
  • ஊட­கத்­து­றை­யில் 50 ஆண்­டு­கால அனு­ப­வம் பெற்­ற­வ­ரும்
  • ‘தி இந்து’, ‘பிசி­னஸ் இந்­தியா’, ‘அவுட் லுக்’ ஆகிய பத்­தி­ரி­கை­க­ளில் முக்­கி­யப் பொறுப்­பு­களை வகித்­த­வ­ரும்
  • இங்­கி­லாந்­தில் உள்ள ஆக்ஸ்­போர்டு பல்­க­லைக் கழ­கத்­தில் Reuters Fellow–ஆகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு ஒன்­றிய – மாநில அரசு உற­வு­கள் பற்றி விரி­வான ஆய்வை மேற்­கொண்­ட­வ­ரும்
  • 10 ஆண்­டு­கள் தெற்­கா­சிய ஊடக வளர்ச்சி நிறு­வ­ன­மான Panos South Asia–வின் நிரு­வாக இயக்­கு­ந­ரா­கச் செயல்­பட்­ட­வ­ரும்
  • அதே காலத்­தில் Global forum for Media Development–இன் துணைத் தலை­வ­ரா­கப் பணி­யாற்­றி­ய­வ­ரும்
  • தற்­போது, தமிழ்­நாடு அரசு புதி­தாக நிறு­வி­யுள்ள சென்னை இத­ழி­யல் கல்வி நிறு­வ­னத்­தின் தலைமை இயக்­கு­ந­ரா­க (Director General, Chennai Institute of Journalism)
    பணி­யாற்றி வரு­ப­வ­ரும்
  • முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் வாழ்க்கை வர­லாற்று நூலை உல­கப் புகழ்­பெற்ற பெங்­கு­யின் நிறு­வ­னத்­திற்­காக ஆங்­கி­லத்­தில் “Karunanidhi –A Life” என்ற பெயரில் எழு­தி­ய­வ­ரு­மான மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர் ஏ.எஸ்.பன்­னீர்­செல்­வன் அவர்­க­ளுக்கு 2025ஆம் ஆண்­டிற்­கான ‘முர­சொலி செல்­வம் விருது’ வழங்­கப்­ப­டும் என அறி­விப்­ப­தில் முர­சொலி அறக்­கட்­டளை மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றது.

2025ஆம் ஆண்­டிற்­கான ‘முர­சொலி செல்­வம் விருது’ வரு­கிற 17–09–2025 அன்று மாலை 6.00 மணி­ய­ள­வில் கரூர், கரூர் பை–பாஸ் சாலை, கோடங்­கி­பட்­டி­யில் நடை­பெ­றும்‘தி.மு.க. முப்­பெ­ரும் விழா’­வில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வ­ரும் – தமிழ்­நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்­க­ளால் வழங்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது. இவ்வாறு முரசொலி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share