திரையுலகில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை புதிய ஹீரோயின்களின் ஆதிக்கம் அதிகமாகும். அதற்கு முன்னர் கோலோச்சியவர்கள் மெல்ல அக்கா, அண்ணி, அம்மா பாத்திரங்களை நோக்கி நகர்வார்கள் அல்லது திரையுலகை விட்டு விலகிச் சொந்த வாழ்வில் கவனம் செலுத்துவார்கள். urvashi recalls manju warrier father asked chance
இந்த வழக்கத்தை உடைக்கிற நாயகிகள், பிந்தைய தலைமுறை நாயகிகளோடு போட்டி போடுவார்கள். அதேநேரத்தில், தனிப்பட்ட முறையில் அவர்களோடு அன்பும் நட்பும் பாராட்டுவார்கள். அந்த வரிசையில் இடம்பெறுபவர்கள் ஊர்வசி மற்றும் மஞ்சு வாரியர்.
எண்பதுகளில் மலையாளத் திரையுலகில் வெற்றி நடை போட்ட ஊர்வசி, தொண்ணூறுகளில் அறிமுகமான மஞ்சு வாரியர் உடன் இன்றும் சிறப்பானதொரு நட்புறவைப் பேணி வருகிறார்.

சமீபத்தில் இருவரும் ‘தேரி மேரி’ எனும் மலையாள படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர். அந்த மேடையில் பேசிய ஊர்வசி, ‘நாயகியாக நடிக்க வரும் முன்னரே மஞ்சுவை எனக்குத் தெரியும்’ என்றிருக்கிறார். அதைக் கேட்டு மஞ்சுவே ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.
‘இன்ஸ்பெக்டர் பலராம்’ எனும் கன்னடப் படத்தின் படப்பிடிப்பு கன்னூரில் நடைபெற்றிருக்கிறது. அப்போது, அந்த படப்பிடிப்பு நடத்தப்பட்ட வீட்டின் உரிமையாளரை அழைத்துக்கொண்டு வந்து ஊர்வசியைச் சந்தித்திருக்கிறார் மஞ்சுவின் தந்தை. மகளின் புகைப்படங்களை அவரிடம் காட்டியிருக்கிறார்.

’அந்த போட்டோக்களில் மஞ்சுவின் கண்கள் அழகாக இருந்தன. இதற்கு முன்னர் நடித்திருக்கிறாரா என்று அவரிடம் கேட்டேன். ’இல்ல, ஆனால், நடிப்பதில் ஆர்வம் அதிகம்’ என்று மஞ்சுவின் தந்தை பதில் சொன்னார்’ என்று கூறியிருக்கிறார் ஊர்வசி.
படப்பிடிப்புத்தளத்தில் இருந்த இயக்குனர் ஐ.வி.சசி அன்றைய தினம் சீக்கிரமே சென்றுவிட்டதாகவும், அதன்பிறகு பல முறை மஞ்சுவைச் சந்தித்தபோதும் கூட இந்த சம்பவம் பற்றி பகிர்ந்து கொண்டதில்லை என்றும் ஊர்வசி சொல்லியிருக்கிறார்.
அந்த சந்திப்பையும், அதன்பிறகான மஞ்சுவின் வளர்ச்சியையும் ஊர்வசி எவ்வாறெல்லாம் ரசித்திருப்பார்? ஏற்கனவே சொன்னது போல, முந்தைய தலைமுறை பிரபலங்கள் இன்றிருக்கும் நட்சத்திரங்களைப் புகழ்வதன் வழியே அதனை உணர்ந்து கொள்ள முடியும்..!