இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க இன்னைக்கு முருக பக்தர்கள் மாநாடு பத்தி பேசிட்டு இருந்தாங்க.
அப்போ ஒருத்தரு, ”மாநாட்டுல முருகரு அப்பவே எல்லாரையும் சமமா பாத்தாருனு சொன்னாங்க. அதனால இனி நாமளும் சமூக நீதி பேசுவோம்’னு ஒரு பாஜகக்காரர் சொல்ல..
அதுக்கு ஒரு பெரியவரு, “அதுசரி… முருகரு குறத்தி பொண்ண கட்டுனா மாறி, உன் மகனுக்கு வேறசாதில இருந்து பொண்ணு எடுப்பியா’னு கேட்டாரு.
அந்த ஆளுக்கிட்ட இருந்து சத்தமே இல்ல… ’சமூகநீதி மாநாட்டுல சும்மா பேசுறது இல்ல.. செய்யுறது’னு அந்த பெரியவரு சொல்லாம சொல்லிட்டு அங்கிருந்து போயிட்டாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls june 22

Mannar & company™🕗
ஞாயிறு ~
காசு இருந்தா மட்டன் கறி எடுத்து வீட்டில் சமைப்போம்,
காசு இல்லைன்னா குடும்பத்தோட மாமியார் வீட்டுக்கு கிளம்பி போய்விடுவோம்!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பிளாட்பார்ம் கடைகளில் விற்கப்படும் பொருடகளுக்கு மட்டும் ஐந்து விதமான விலைகள்.
கடைக்காரரின் ஆரம்ப விலை.
கடைக்காரரின் இறுதி விலை.
பெண்கள் வாங்கி செல்லும் விலை.
ஆண்கள் ஏமாறும் விலை.
தாங்கள் வாங்கியதாக ஆண்கள் வீட்டில் சொல்லும் விலை.

Anvar
யோகா ஒரு பயிற்சி அல்ல வாழ்க்கையை உன்னதமாக மாற்றும் வழி!
எப்படி?!
கல்யாணத்துக்கு பிறகு மனைவி எது சொன்னாலும் கோபப்படாமல் அமைதியாக கேட்பதே யோகா தானே!
#YogaDay

ஜாபர்
அங்க கல்யாண மண்டபத்துல என்ன கலாட்டா.?
மாப்பிள்ளை தாலி கட்றதுக்கு முன்ன பொண்ணு கிட்ட ‘நீ தான் அழறியே நான் வேணா உன் தங்கச்சி கழுத்துல தாலி கட்டவா..?’ ன்னு பர்மிசன் கேட்டானாம்..

🌴 T.R.🌴
பில்லாகுடி சித்தர் சொல்றாரு
மூன்று வருடமாக ஒரு தொழிலை உருவாக்குவதற்கான பொறுமை மக்களிடம் இல்லை.
ஆனால் நாற்பது வருடமாக வேலைக்கு செல்லும் பொறுமை அவர்களுக்கு உண்டு.

Sasikumar J
கல்யாணத்துக்கு பிறகு கூட கொஞ்சம் ஆண்களுக்கு மதிப்பு இருக்கும் ஆனால் அதிகாலை ரோடு சிக்னலுக்கு மதிப்பே இல்லை…!

மெக்கானிக் மாணிக்கம்
ராமர் ~ ஜி எனக்கு ஒரு மாநாடு நடத்துங்க ?
தமிழ்நாட்ல உனக்கு மவுசு இல்ல… பிறகு பாப்போம்
லாக் ஆஃப்