இந்திய ரயில்வேயின் இரண்டு பெரிய பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றாக இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான முன்மொழிவை ரயில்வே அமைச்சகம் சமர்ப்பித்துள்ளது. இரண்டு பெரிய பொதுத்துறை நிறுவனங்களான IRCON International (IRCON) மற்றும் Rail Vikas Nigam Limited (RVNL) இணைப்பு குறித்த செய்தி பங்குச் சந்தையில் (Stock Market) பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பொதுத்துறை நிறுவனங்களின் (Railway Companies merge) இணைப்புக்கான முறையான முன்மொழிவை ரயில்வே அமைச்சகம் தயாரித்துள்ளன.
பங்குகளின் விலை உயர்வு:
இந்த செய்தியைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டு வருகின்றன. மேலும் முதலீட்டாளர்கள் அவற்றை அதிக அளவில் வாங்குகின்றனர். வாரத்தின் கடைசி வர்த்தக நாளில், தேசிய பங்குச் சந்தையில் (NSE) ஒரு சீரான தொடக்கத்திற்குப் பிறகு IRCON International (IRCON) பங்குகள் கடுமையாக உயர்ந்தன. வர்த்தகம் 133 ரூபாயில் தொடங்கியது. ஆனால் வலுவான கொள்முதல் அவற்றை ஒரு நாள் அதிகபட்சமாக ரூ.149.43 ஆக உயர்த்தியது. நண்பகலில், அதன் பங்கு 148.25 ரூபாயில் வலுவாக வர்த்தகம் செய்யப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் சுமார் 32 மில்லியன் பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டன. வர்த்தக அமர்வின் முடிவில், பங்குகள் 10 சதவீதம் லாபத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டன.
பங்குகளின் விலை ஏன் உயர்ந்தது?
இரு நிறுவனங்களின் இணைப்பு அறிக்கைகளைத் தொடர்ந்து ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) பங்குகளும் ஏற்றத்தைக் கண்டன. RVNL பங்குகள் ஒரு நாள் அதிகபட்சமாக 298.40 ரூபாயை எட்டின. கிட்டத்தட்ட 7% லாபம் கிடைத்தது. அதன் பின்னர் அவை சில சரிவுகளைக் கண்டன. ஆனால் தொடர்ந்து பச்சை நிறத்திலேயே வர்த்தகம் செய்யப்பட்டன. RVNL பங்குகளும் நான்கு நாள் சரிவை முறியடித்து மீண்டன.
இணைப்பு திட்டம்:
ரயில்வே அமைச்சகம் IRCON மற்றும் RVNL இணைப்பை முன்மொழிந்துள்ளது. இந்த திட்டம் நிதி அமைச்சகம், பொது நிறுவனங்கள் துறை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) ஆகியவற்றின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். அது அங்கீகரிக்கப்பட்டால் இரண்டு நிறுவனங்களும் ஒன்றிணைந்து ரயில்வே உள்கட்டமைப்பில் ஒரு பெரிய, ஒருங்கிணைந்த பிரிவை உருவாக்கும்.
நிறுவனங்களின் அப்டேட் என்ன?
இந்த இணைப்பு திட்டம் குறித்து எந்த நிறுவனமும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடவில்லை. IRCON மற்றும் RVNL இன்னும் பங்குச் சந்தைகளுக்கு இணைப்பு தொடர்பான எந்த தகவலையும் வெளியிடவில்லை. 1976ஆன் ஆண்டில் உருவாக்கப்பட்ட IRCON நிறுவனம் ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் பெருநகரங்கள் போன்ற திட்டங்களில் நிபுணத்துவம் பெற்றது. 2003ஆம் ஆண்டு நிறுவப்பட்ட RVNL நிறுவனம் ரயில்வே உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
