நயினார் அநாகரிக பேச்சு – நடிகை திரிஷா கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

நடிகர் விஜய் திரிஷா குறித்த நயினார் நாகேந்திரன் கருத்துக்கு திரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்.

நடிகர் விஜய் சமீபத்தில் சேலத்தில் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய போது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார். இதைத்தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய்யை “அரசியல் அனுபவமில்லாதவர்” என்று கூறி, “முதலில் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். திரிஷா வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். குடும்பத்துடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும்” என்று தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசினார்.

அவரது இந்த கருத்துக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவத்தன. இந்நிலையில் நடிகை திரிஷா நயினார் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து வழக்கறிஞர் மூலமாக நடிகை திரிஷா வெளியிட்டுள்ள அறிக்கையில்,” “திரிஷா ஒரு உயர் அரசியல் பதவியில் உள்ள ஒருவரால் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கவில்லை.

திரிஷா எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொண்டவர் அல்ல, அத்தகைய தொடர்பு கொள்ளவும் விரும்பவில்லை என்பதை தெளிவாகத் தெரிவிக்கிறார்.

ADVERTISEMENT

மேலும், கடந்த காலத்தில் தொடர்ந்து கூறியது போலவே, அரசியல் விஷயங்களில் அவர் எப்போதும் நடுநிலை நிலைப்பாட்டையே கொண்டிருந்து வருகிறார்.

அவர் தனது கலைத் திறமையால் மட்டுமே அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்; எந்த அரசியல் சார்புடனும் அல்ல.

ADVERTISEMENT

மேலும், மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கையை பொது விவாதத்தின் பொருளாக ஆக்கக்கூடாது என்று பொதுவான கருத்து உள்ளது. உயர் பதவிகளில் உள்ளவர்கள் பொது விவாதத்தில் பொறுப்புணர்வுடனும், சமநிலையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரிஷாவின் பெயரை அவருக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் இழுக்க வேண்டாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share