அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.
அதிமுகவில் ஏற்கனவே செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்தார்; சட்டமன்றத்திலும் தனித்து செயல்பட்டு வந்தார். பின்னர் சமாதானம் ஏற்பட்டது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தம்மை தொடர்ந்து புறக்கணித்து உதாசீனப்படுத்துவதாக செங்கோட்டையன் வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில்தான் தாம் செப்டம்பர் 5-ந் தேதி மனம் திறந்து பேசப் போவதாக திடீரென செங்கோட்டையன் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.
செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு: