சும்மா இருக்கீங்களா? மாதம் ரூ.1200 பணமும் கொடுத்து, இலவசப் பயிற்சியும் தராங்க! தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

tn govt free skill training monthly allowance 1200 apply online

“கையில டிகிரி இருக்கு… ஆனா வேலை இல்லை. சும்மா வீட்ல இருக்கவும் முடியல, ஏதாவது தொழில் கத்துக்கலாம்னா ஃபீஸ் கட்ட காசு இல்ல…” என்று புலம்பும் இளைஞர்களுக்குத் தமிழ்நாடு அரசு ஒரு ‘சூப்பர்’ வாய்ப்பை வழங்கியுள்ளது.

இளைஞர்களின் திறனை மேம்படுத்தி, அவர்களைத் தொழில் முனைவோராக மாற்றும் நோக்கத்தில், தமிழ்நாடு அரசு பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது மாதம் ரூ.1200 உதவித்தொகையுடன் (Stipend) கூடிய இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

என்ன பயிற்சி? தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து நடத்தும் இந்தப் பயிற்சியில், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், எலக்ட்ரீசியன், டெய்லரிங் (தையல் பயிற்சி), அழகுக்கலை மற்றும் பல்வேறு கைவினைத் தொழில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

சிறப்பம்சங்கள்:

ADVERTISEMENT
  • முழுக்க முழுக்க இலவசம்: பயிற்சிக் கட்டணம் ஒரு பைசா கூட கிடையாது.
  • கைச்செலவுக்குப் பணம்: பயிற்சி பெறும் காலத்தில், உங்களின் போக்குவரத்து மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ.1200 உதவித்தொகையாக உங்கள் வங்கிக் கணக்கிற்கே வந்துவிடும்.
  • சான்றிதழ்: பயிற்சி முடிந்ததும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இதை வைத்துப் வங்கிக் கடன் பெற்றுச் சொந்தத் தொழில் தொடங்கலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் 10, 12ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் வரை யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். (பயிற்சிக்குப் பயிற்சி கல்வித் தகுதி மாறுபடும்).
  • வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ளவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் (Employment Office) அல்லது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திறன் பயிற்சி மையத்தையும் அணுகலாம்.

ADVERTISEMENT

சும்மா இருக்கறதுக்கு, ஏதாவது ஒரு கைத்தொழிலைக் கத்துக்கிறது என்னைக்குமே சோறு போடும் பாஸ். அதுவும் கவர்மெண்ட்டே காசு கொடுத்துச் சொல்லிக்கொடுக்குது. இந்த ரூ.1200 பெரிய தொகை இல்லனாலும், பஸ் சார்ஜூக்கு ஆச்சுல்ல? முக்கியமா, பயிற்சி முடிஞ்சதும் ‘வேலைவாய்ப்பு முகாம்’ நடத்தி வேலையும் வாங்கித் தராங்க. 

வீட்ல இருக்கற பெண்கள், காலேஜ் முடிச்சுட்டு வேலை தேடுற பசங்க… உடனே பக்கத்துல இருக்கற எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ் போய் விசாரிங்க. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share