கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பயன்படுத்த மேலும் மூன்று மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. Free bus travel card
இதுதொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையின்படி, மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப்போராட்டவீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக பெற்றிடும் வகையில், 07.09.2023 முதல் முதற் கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், செயல்படுத்தப்பட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகள் அனைவரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வழியாக பெறுகின்ற வசதியினை அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப் படுத்த புதிய வசதிகளுடன் கூடிய மென் பொருள் தயாரிப்பு பணிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA) வழியாக மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை செயல்படுத்த, போதிய கால அவகாசம் தேவைப்படுகின்ற நிலையில், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 31.03.2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை, 30.06.2025 வரை நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு 30.09.2025 வரை நீட்டித்து பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Free bus travel card