வைகை எக்ஸ்பிரஸ், நெல்லை வந்தே பாரத் உள்ளிட்ட 4 ரயில்களின் நேர அட்டவணை இன்று (ஜனவரி 1) முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயில் (வண்டி எண். 20665), ஒரு சில நிறுத்தங்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டு உள்ளது. புதிய நேர அட்டவணைப்படி திருச்சிக்கு இரவு 7 மணிக்கும், திண்டுக்கலுக்கு 7.58 மணிக்கும், மதுரைக்கு 8.45 மணிக்கும், விருதுநகருக 9.20 மணிக்கும், கோவில்பட்டிக்கும் 9.48 மணிக்கும், நெல்லைக்கு இரவு 11 மணிக்கு சென்றடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண். 12635) புதிய அட்டவணை அடிப்படையில் எழும்பூரில் இருந்து இன்று மதியம் முதல் 1.15க்கு புறப்படும், தாம்பரத்திற்கு 1.40 மணிக்கும், செங்கல்பட்டுக்கு 2.08 மணிக்கும், விழுப்புரத்திற்கு மாலை 3.30 மணிக்கும், விருத்தாச்சலத்திற்கு 4.14க்கும், அரியலூருக்கு 4.49க்கும், ஸ்ரீரங்கத்திற்கு 5.30க்கும், திருச்சி 6.05 மணிக்கும், மணப்பாறைக்கு 6.39 மணிக்கும், திண்டுக்கலுக்கு 7.17 மணிக்கும் சோழவந்தானுக்கு 7.49 மணிக்கும் சென்றடையும். மதுரைக்கு இரவு 8.35 மணிக்கு செல்லும்.
இதேபோல் மதுரையிலிருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண். 22624) மதுரையில் இருந்து புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மதுரையில் இரவு 8.35 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும்.
திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் டெமு ரயில் (வண்டி எண். 76835) புறப்படும் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் படி திருச்சியில் இருந்து இன்று மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.05க்கு சென்றடையும்.
