தமிழகத்தில் இயல்பை விட 4 டிகிரி செல்சியல் வெப்ப நிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Temperatures will increase in tamilnadu
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்துள்ளது
அதிகபட்சமாக மதுரை விமான நிலையம்: 39.2° செல்சியஸ், குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 21.5° செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூலை7) வெளியிட்ட அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 13ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை 07-07-2025 முதல் 09-07-2025 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்” என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Temperatures will increase in tamilnadu
