தன்னுடைய விந்தணு தானம் மூலம் பிறந்த 100 குழந்தைகள் உட்பட அனைவருக்கும் தனது 12 லட்சம் கோடி சொத்துகளை விட்டுச் செல்வதாக அறிவித்துள்ளார். Telegram Pavel Durov shares his 106 children
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் பவெல் துரோவ். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு டெலிகிராம் எனும் செயலியை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அதனை உலக முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டெலிகிராமின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பவெல் துரோவ், தனது 12 லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை தனது 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
’என்னது 100க்கும் மேற்பட்ட குழந்தைகளா’ என நீங்கள் புருவம் உயர்த்துவது புரிகிறது. 40 வயதான பவெல் அதிகாரப்பூர்வமாக 3 மனைவிகள் மூலம் 6 குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். எனினும் தனது விந்தணுவை தானம் செய்ததன் மூலம் உலகம் முழுவதும் 12 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளனர்.
இந்த நிலையில் பவெல், பிரெஞ்சு பத்திரிகை லீ பாயிண்டிற்க்கு அளித்த பேட்டியில், “எனக்கு சட்டப்பூர்வமாக 6 குழந்தைகளும், உயிரியல் ரீதியாக 100 குழந்தைகளும் உள்ளனர். அவர்களுக்கிடையே நான் எந்தவித வேறுபாட்டையும் காட்ட நான் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் என் குழந்தைகள், அவர்கள் அனைவருக்கும் என் சொத்தில் ஒரே மாதிரியான உரிமை உண்டு.
எனினும் அவர்கள் இந்த சொத்தை 2055-க்கு பிறகுதான் பெற முடியும். ஏன் என்றால், அவர்கள் சாதாரண மனிதர்களைப் போல வாழ வேண்டும், தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்களை நம்ப கற்றுக்கொள்ள வேண்டும், இந்த பணத்தை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது என்பதே என் விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.
40 வயதில் உயில் எழுதுவதற்கான காரணத்தைக் கேட்டபோது, ”எனது வேலை ஆபத்தை உள்ளடக்கியது. பயனர்களின் சுதந்திரங்களைப் பாதுகாப்பது உங்களுக்கு பல எதிரிகளை உருவாக்கும்” என்றார்.
பவெலின் இந்த அறிவிப்பு மூலம் ஒரு குழந்தைக்கு சுமார் $131 மில்லியன் முதல் $161 மில்லியன் வரை கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
ஏன் அப்படி? தற்போது துபாயில் இருக்கும் துரோவ், தங்களை நம்ப கற்றுக்கொள்ள வேண்டும், உருவாக்க முடியும், வங்கிக் கணக்கைச் சார்ந்து இருக்கக்கூடாது” என்று விரும்புகிறார்.
“நான் பாதுகாக்கும் மதிப்புகளுக்கு உண்மையாக” இருக்க எதிர்நோக்கும் டெலிகிராமைப் போலவே, தனது குழந்தைகளையும் பாதுகாக்க விரும்புவதாக துரோவ் வலியுறுத்தினார்.
பிரான்சில் அவர் எதிர்கொள்ளும் குற்றவியல் குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் பேசினார், அங்கு அவர் கடந்த ஆண்டு பல குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டார். டெலிகிராம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவுவதிலும், குழந்தை ஆபாசத்தைப் பரப்புபவர்களுக்கும் உடந்தையாக இருந்ததாக CNN தெரிவித்துள்ளது.
துரோவ் இந்தக் குற்றச்சாட்டுகளை “அபத்தமானது” என்று அழைத்தார்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
- பாவெல் துரோவின் நிகர மதிப்பு என்ன?
ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, அவருக்கு $13.9 பில்லியன் நிகர மதிப்பு உள்ளது.
- பாவெல் துரோவ் இப்போது எங்கே?
துரோவ் தற்போது துபாயில் இருக்கிறார், அங்கு அவரது நிறுவனம் அமைந்துள்ளது. அவர் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரட்டை குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
- டெலிகிராம் எப்போது தொடங்கப்பட்டது?
துரோவ் 2013 இல் டெலிகிராமை நிறுவினார். சமூக ஊடக பயன்பாடு ரஷ்யாவில் மிகவும் பிரபலமாக உள்ளது.