தவறான தகவல்களைக் கொண்ட மின்னஞ்சல்களை வரி செலுத்துவோர் (Taxpayers) பெறுவது குறித்து வருமான வரித் துறை (Income Tax Department) தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் தகவலை வரி செலுத்துவோர் தவறான தகவல்களைக் கொண்ட மின்னஞ்சல்களைப் பெற்றதாக வருமான வரித் துறை ஒப்புக்கொண்டது. மேலும், இவ்வாறு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
சேவை வழங்குநருடன் இணைந்து பணியாற்றி வருகிறது:
”2026-27ஆம் ஆண்டுக்கான (நிதியாண்டு 2025-26) தற்போதைய அட்வான்ஸ் டேக்ஸ் இ-பிரச்சாரத்தின் கீழ் (Advance Tax e-Campaign) சில வரி செலுத்துவோர் செய்த ‘முக்கியமான பரிவர்த்தனைகள்’ குறித்த தவறான தகவல்களைக் கொண்ட மின்னஞ்சல்களைப் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தப் பிழையை எங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்ததற்காக வரி செலுத்துவோருக்கு இந்தத் துறை நன்றி தெரிவிக்கிறது. ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது. சிக்கலைத் தீர்க்க எங்கள் சேவை வழங்குநருடன் நாங்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
நினைவூட்டல்களாக மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன:
2026-27 ஆம் ஆண்டுக்கான (நிதியாண்டு 2025-26) அட்வான்ஸ் டேக்ஸ் இ-பிரச்சாரம் தொடர்பாக முன்னர் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களைப் புறக்கணிக்குமாறு வருமான வரித் துறை வரி செலுத்துவோரை வலியுறுத்தியுள்ளது. “இந்த மின்னஞ்சல்கள் வரி செலுத்துவோர் இணக்க போர்ட்டலில் கிடைக்கும் தொடர்புடைய நிதித் தகவல்களை மதிப்பாய்வு செய்யவும், பொருந்தக்கூடிய இடங்களில் பொருத்தமான முன்கூட்டிய வரி விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்யவும் உதவும் வகையில் ஒரு வசதி நினைவூட்டல் மட்டுமே என்பதை வருமான வரித் துறை தெளிவுபடுத்த விரும்புகிறது” என்று மேலும் கூறியது.
பரிவர்த்தனை விவரங்களைச் சரிபார்க்க ஆலோசனை:
வரி செலுத்துவோர் தங்கள் பரிவர்த்தனை விவரங்களை இணக்க போர்ட்டலில் உள்ள ‘e-campaign’ ஆப்சன் மூலம் சரிபார்க்குமாறு வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதை மின்னணு தாக்கல் போர்டல் மூலம் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
