தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா ஆளுநர் ஆர்வி அர்லேகர் (ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்) தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த போஸ் இன்று திடீரென ராஜினாமா செய்தார். அதேபோல லடாக் துணை நிலை ஆளுநர் சுவிந்தர் குப்தாவும் தமது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்து வரும் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் தமிழகத்துக்கான புதிய ஆளுநராக கேரளா ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கூடுதல் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
