“வளர்ற பையனை கிள்ளிவிடப் பார்க்குறாங்க” என்று சினிமாவில் அடிக்கடி ஒரு டயலாக் வரும். இப்போது அது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எதிராக நடக்கிறதோ என்ற சந்தேகம் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி‘ (Parasakthi) திரைப்படம், ஒருபுறம் வசூலைக் குவித்தாலும், மறுபுறம் இணையத்தில் கடுமையான ‘சைபர் தாக்குதலை’ (Cyber Attack) எதிர்கொண்டு வருகிறது.
Review Bombing என்றால் என்ன? படம் வெளியான முதல் நாளிலிருந்தே, சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட கும்பல் படத்தைப் பற்றி மிகவும் மோசமான கருத்துக்களைப் பரப்பி வருகிறது. படம் பார்த்த உண்மையான ரசிகர்கள் “படம் நன்றாக இருக்கிறது, ஃபேமிலி என்டர்டெய்னர்” என்று சொன்னாலும், டிக்கெட் முன்பதிவு செயலிகளில் வேண்டுமென்றே குறைவான மதிப்பெண்களை (1 Star Rating) அளித்து, படத்தின் தரத்தைக் குறைத்துக் காட்டுவது நடந்துள்ளது. இதைத் தொழில்நுட்ப மொழியில் ‘ரிவ்யூ பாம்பிங்‘ (Review Bombing) என்பார்கள்.
புக் மை ஷோ அதிரடி: வழக்கமாக ரசிகர்கள் அளிக்கும் ரேட்டிங்கை வைத்துத்தான் மற்றவர்கள் படத்திற்குச் செல்வார்கள். ஆனால், ‘பராசக்தி’ படத்திற்குச் செயற்கையாக ரேட்டிங் குறைக்கப்படுவதைக் கவனித்த இந்தியாவின் முன்னணி டிக்கெட் முன்பதிவுத் தளமான ‘BookMyShow’ (BMS), ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
தற்காலிகமாக ‘பராசக்தி’ படத்திற்கான பார்வையாளர்கள் ரேட்டிங் (Audience Rating) வசதியை அந்தத் தளம் முடக்கி (Disable) வைத்துள்ளது. ஒரு பெரிய ஹீரோவின் படத்திற்கு இப்படி நடப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. “போலி கணக்குகளில் இருந்து வரும் நெகட்டிவ் விமர்சனங்களைத் தடுக்கவே இந்த நடவடிக்கை” என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் வளர்ச்சி காரணமா? ‘அமரன்’ போன்ற மெகா ஹிட் படங்களுக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் வசூல் மன்னராக உயர்ந்து வருகிறார். ரஜினி, விஜய்க்கு அடுத்து குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஆதரவு அவருக்குத் தான் அதிகம். இந்த அசுர வளர்ச்சியைப் பிடிக்காத சிலர்தான், இப்படித் திட்டமிட்டுப் படத்தின் பெயரைக்கெடுக்கிறார்களோ என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
உண்மை நிலவரம் என்ன? இணையத்தில் என்னதான் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. “விமர்சனங்களை நம்பாதீர்கள், படம் ஜாலியாக இருக்கிறது” என்பதே படம் பார்த்தவர்களின் கருத்தாக உள்ளது.
நல்ல படங்களைத் திட்டமிட்டு வீழ்த்த நினைக்கும் இந்த ‘ரிவ்யூ பாம்பிங்’ கலாச்சாரம் தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானதல்ல என்பதே திரை விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
