பச்சை மிளகாயை 20 நாட்கள் வரை கெடாமல் பாதுகாத்து வைத்திருப்பதற்கு சில எளிய வழிமுறைகளைப் பார்க்கலாம்.
பச்சை மிளகாய் (green chillies) என்பது நம் அன்றாட சமையல்களில் தேவைப்படும் ஒன்றாக மாறிவிட்டது. சட்னி, சாம்பார் என அனைத்திற்கும் காரத்திற்காக பச்சை மிளகாய் சேர்க்கிறோம். சந்தைகளில் பச்சை மிளகாய் வாங்கும்போது, அவை சற்று உடைந்திருந்தாலும் கூட நாம் அவற்றை வாங்குவதில்லை. பச்சை மிளகாயை வாங்கி நாம் சேமித்து வைத்தாலும் அவை சில நாட்களில் காய்ந்து மஞ்சள் அல்லது சிவப்பு நிறமாக மாறுகின்றன. எனினும், சில வழிகள் மூலம் பச்சை மிளகாயை 15 – 20 நாட்கள் வரை புதியது போலவும், பச்சையாகவும் வைத்திருக்கலாம்.
நன்கு உலர்த்திய பிறகு சேமிக்க வேண்டும் (Store after drying): பச்சை மிளகாயை வாங்கியவுடன் ஈரமில்லாமல் நன்கு துடைக்க வேண்டும். அதன்பிறகு சற்று நேரம் அதனை உலரவிட வேண்டும். ஈரப்பதம்தான் மிளகாய் கெட முக்கிய காரணம். சிறிய ஈரப்பதம் கூட பச்சை மிளகாய் சீக்கிரம் கெட்டுவிட வழிசெய்துவிடும். குறிப்பாக சேமிப்பதற்கு முன்பு பச்சை மிளகாயை கழுவுவதை தவிர்த்துவிட வேண்டும்.
தண்டுகளை அகற்ற வேண்டாம் (Do not remove the green chillies stems): மிளகாயை வாங்கியவுடன் தண்டுகளை கிள்ள வேண்டாம். தண்டுகள் தான் மிளகாயை நீண்ட நாட்களுக்கு செழிப்பாக வைத்திருக்க உதவி புரிகிறது. தண்டை அகற்றுவதன் மூலம் மிளகாய் சீக்கிரம் வாடி காய்ந்துவிடுகிறது. எப்போதும் மிளகாயை தண்டுகளை அகற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டால் வாடாமல் புத்துணர்ச்சியோடு இருக்கும்.
காகிதம் அல்லது செய்தித்தாள் கொண்டு சுற்றிவைக்கலாம் (wrap it with paper or newspaper): காற்று புகாத கொள்கலன் அல்லது ஜிப்-லாக் பையின் அடிப்பகுதியை ஒரு காகிதம் அல்லது செய்தித்தாளை வைக்க வேண்டும். உலர்ந்த மிளகாயை அதன் மேலே வைத்து, அதன் மேல் மற்றொரு காகிதத் துண்டை வைக்க வேண்டும். காகிதத் துண்டு அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, மிளகாயை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்கும்.
ஜிப்லாக் கவர்( use Ziplock cover for green chillies) : பச்சை மிளகாயை வாங்கிய பிறகு ஒரு மாதம் வரை புதியதாக வைத்திருக்க விரும்பினால், மிளகாயை நன்கு கழுவி, சுத்தம் செய்து, உலர்த்தி, பின்னர் குளிர்சாதன பெட்டியின் காய்கறி தட்டில் ஜிப்லாக் பையில் சேமிக்கவும். இவ்வாறு சேமிக்கப்படும் போது, மிளகாய் ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது. நீங்கள் அவற்றை ஜிப்லாக் பையில் வைத்து மூடும்போது, காற்று இல்லாமல் கெட்டுப்போகாது.
காற்று புகாத கொள்கலன் வேண்டும் (airtight container): மிளகாய் காற்று பட்டுக்கொண்டிருந்தால் காய்ந்துவிடும். ஆகவே, எப்போதும் காற்று புகாத கொள்கலனில் வைக்க வேண்டும். காற்று புகாத கொள்கலன், ஜிப்-லாக் பையில் சேமிக்க வேண்டும்.நீங்கள் கொள்கலனை எவ்வளவு குறைவாகத் திறக்கிறீர்களோ, அவ்வளவு நேரம் புதிதாக இருக்கும்.
பிளாஸ்டிக் பைகளில் இருந்து காற்றை அகற்றிவிட வேண்டும் (Plastic bags): நீங்கள் ஜிப்-லாக் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், மிளகாயை ஒரு வழக்கமான பிளாஸ்டிக் பையில் சேமிக்கலாம். ஆனால், அதில் காற்று புகாமல் இருக்க வேண்டும். இது ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுக்கும் மற்றும் மிளகாய் சிவப்பு நிறமாக மாறுவதைத் தடுக்கும்.
ஈரப்பதம் பாதுகாப்பு, காற்று புகாத சேமிப்பு மற்றும் சரியான வெப்பநிலை ஆகியவை பச்சை மிளகாயை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலே உள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சரியாகப் பின்பற்றினால், பச்சை மிளகாய் 2–4 வாரங்களுக்கு வாடாமல் அல்லது சிவப்பு நிறமாக மாறாமல் புதியதாக இருக்கும்.
