‘கபீர் சிங்’ ஷாஹித் கபூரின் அந்த ‘ரக்கட்’ லுக் ரகசியம் இதுதான்! – பிரபல ஸ்டைலிஸ்ட் ஓபன் டாக்!

Published On:

| By Santhosh Raj Saravanan

shahid kapoor kabir singh hairstyle secrets celebrity stylist aalim hakim interview bollywood news

பாலிவுட்டில் 2019-ம் ஆண்டு வெளியாகி வசூலை வாரிக்குவித்த படம் ‘கபீர் சிங்’ (Kabir Singh). தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’யின் ரீமேக் என்றாலும், ஷாஹித் கபூர் (Shahid Kapoor) தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்திருப்பார். குறிப்பாக, அந்தப் படத்தில் அவர் வைத்திருந்த நீண்ட தாடியும், கலைந்த தலைமுடியும் (Dishevelled Hair) இளைஞர்கள் மத்தியில் பெரிய ‘டிரெண்ட்’ ஆக மாறியது. இந்நிலையில், அந்த ஐகானிக் தோற்றம் எப்படி உருவாக்கப்பட்டது என்ற ரகசியத்தை, பிரபல செலிபிரிட்டி ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம் (Aalim Hakim) சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

கலைந்த தலையை உருவாக்குவது கஷ்டம்!” பொதுவாக ஒரு நடிகரை அழகாகக் காட்டுவதற்குத் தலைமுடியைச் சீவி ஸ்டைல் செய்வது எளிது. ஆனால், “கவனிக்கப்படாதது போல” ஒரு தோற்றத்தைக் கொண்டு வருவதுதான் மிகவும் சவாலானது என்கிறார் ஆலிம். “படத்தில் கபீர் சிங் கதாபாத்திரம் காதலில் தோல்வியடைந்து, போதைக்கு அடிமையாகி, தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் ஒரு மனநிலையில் இருக்கும். அதனால், அவன் தன்னை அழகுப்படுத்திக் கொள்ள மாட்டான். அவனது தலைமுடி எப்போதும் கலைந்து, அழுக்காகவும் (Dishevelled) இருக்க வேண்டும் என்பதுதான் இயக்குநரின் கோரிக்கை” என்று அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மூன்று விதமான தோற்றங்கள்: படத்தில் ஷாஹித் கபூருக்குக் கல்லூரி மாணவன், மருத்துவர், மற்றும் போதைக்கு அடிமையானவர் என மூன்று விதமான தோற்றங்கள் தேவைப்பட்டன. இதில் அந்த ‘ரக்கட்’ (Rugged) லுக்கை உருவாக்க, ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பிற்கு முன் பல மணி நேரம் செலவிட வேண்டியிருந்ததாம்.

பர்பெக்ட் மெஸ்ஸிலுக் (Perfect Messy Look): “அது பார்ப்பதற்குத் தூங்கி வழிந்த முகம் போலவும், பல நாட்களாக தலை வாராதது போலவும் தெரிய வேண்டும். ஆனால், அதைத் திரையில் அழகாகவும் காட்ட வேண்டும். இதற்காக நாங்கள் ஒவ்வொரு முடியையும் பார்த்துப் பார்த்து ஸ்டைல் செய்தோம். அது ‘ஸ்டைல் செய்யப்படாதது போல ஸ்டைல் செய்யப்பட்டது’ (Styled to look unstyled)” என்று அந்த ரகசியத்தை உடைத்துள்ளார்.

ADVERTISEMENT

டிரெண்ட் செட்டர்: படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆனாலும், இன்றும் வட இந்தியாவில் பல இளைஞர்கள் ‘கபீர் சிங்’ போலத் தாடி வளர்ப்பதையே விரும்புகின்றனர். கதாபாத்திரத்தின் வலியையும், கோபத்தையும் அந்தத் தலைமுடி அத்தனை தத்ரூபமாக வெளிப்படுத்தியது என்றால் மிகையல்ல!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share