பங்கு முதலீட்டாளர்கள் நிச்சயமற்ற காலங்களில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) தலைவர் துஹின் காந்த் பாண்டே வலியுறுத்தியுள்ளார். இது நிச்சயமற்ற காலங்களில் சிறந்த உத்தி என்று அவர் கூறியுள்ளார். மேற்காசியாவில் நடந்து வரும் பதட்டங்கள் காரணமாக சந்தைகளில் விற்பனை அழுத்தத்திற்கு மத்தியில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் அல்லது ரஷ்யா-உக்ரைன் போர் (Russia Ukraine War) போன்ற கடந்த கால நிகழ்வுகள், சந்தைகள் காலப்போக்கில் நிலைபெறுவதைக் காட்டியுள்ளன என்று பாண்டே கூறியுள்ளார்.
உலகளாவிய நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் செபி தலைவர் கூறினார். இருப்பினும், உலகின் சில பகுதிகளில் நடந்து வரும் பதட்டங்கள் எரிசக்தி சந்தையில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளன. அவர் கூறுகையில், “பல முதலீட்டாளர்களுக்கு குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்களுக்கு, இந்த நிச்சயமற்ற காலங்களில் சிறந்த உத்தி பொறுமையாக இருப்பதே” என்று அவர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப மாற்றங்கள், AI வசதியை ஏற்றுக்கொள்வது மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றிலிருந்து உருவாகும் நிச்சயமற்ற தன்மை உலகளாவிய பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது என்றார் அவர்.
கடந்த கால அனுபவத்தை மேற்கோள் காட்டி, “சந்தைகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் இறுதியில் நிலைபெறுகின்றன” என்று பாண்டே கூறினார். நிச்சயமற்ற தன்மை விதிவிலக்கல்ல. ஆனால் நிதிச் சந்தைகளின் இயல்பான அம்சம் என்று அவர் மேலும் கூறினார். சவால்கள் இருந்தபோதிலும் ஒரு அமைப்பு எவ்வளவு சீராக, நியாயமாக மற்றும் திறம்பட செயல்பட முடியும் என்பதே உண்மையான சோதனை என்கிறார். நிலையற்ற தன்மை என்பது சந்தைகளின் இயல்பான பண்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நிச்சயமற்ற காலங்களில் மூலதனச் சந்தைகளின் வலிமை, நிலையற்ற தன்மை இல்லாத நிலையில் இருக்காது. நிலையற்ற தன்மை என்பது சந்தைகளின் இயல்பான பண்புதான். நிறுவனங்களை வலுப்படுத்தி, பங்கேற்பை அதிகரித்து, நிர்வாகத்தைப் பராமரித்தால், இந்திய மூலதனச் சந்தைகள் நிச்சயமற்ற தன்மையைச் சமாளித்து வலுவாக வெளிப்படும் என்று பாண்டே ஆலோசனை கூறியுள்ளார்.
