தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலத்திற்கான தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15ம் தேதி அறிவித்தது. தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டது.
தமிழகத்திலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம் நகை உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் கணிசமான அளவு பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 18 மார்ச் 2026 நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ரூ.42.65 கோடி ஆகும். அதன் விவரங்கள் பின்வருமாறு:
- ரொக்கம்: ரூ. 2.37 கோடி
- மதுபானம்: ரூ. 0.18 கோடி
- போதைப்பொருட்கள்: ரூ. 2.88 கோடி
- விலைமதிப்பற்ற உலோகங்கள்: ரூ. 16.42 கோடி
- இலவசங்கள் / பிற பொருட்கள்: ரூ. 20.80 கோடி
தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள். சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
