சென்னை, திருவள்ளூரில் மழை தொடரும்

Published On:

| By Mathi

Chennai Rain

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தின் சில இடங்களிலும், கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும்; பகல் பொழுதிலும் லேசான மழைக்கான வாய்ப்புள்ளது. சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 29-30°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 22°C ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், பின்னர் ஓரளவு மேகமூட்டமாக மாற வாய்ப்புள்ளது. காற்றின் தரம் திருப்திகரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share