காலாண்டு அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
2025-25ஆம் கல்வியாண்டு கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது.
இந்தநிலையில் 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 26 வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என்றும் டிசம்பர் 15; தொடங்கி டிசம்பர் 23 வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள்” என்று வாழ்த்து கூறியுள்ளார்.