தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் வரும் 30ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை ரிவ்யூ மீட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளார். police review meeting will be lead by mkstalin
அதனால் டிஜிபி சங்கர் ஜிவால், கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன், உள்துறை செயலாளர் தீரஜ் குமார் ஆகிய மூவரும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை பற்றி கொலை, கொள்ளை, ஆதாயக் கொலை, போக்சோ வழக்கு, போதைத் தடுப்பு வழக்கு போன்ற விவரங்களை மாவட்ட மாநகரங்களில் இருந்து புள்ளி விவரங்களை தேடி எடுத்து வருகின்றனர்.
மேலும் எதிர்காலத்தில் குற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கைப் பற்றியும் கோப்புகளை தயார் செய்து வருகின்றனர். இந்த ரிவ்யூ மீட்டிங்கில் எஸ்பி, டிஐஜி, ஐஜி, டிசி, ஜேசி மற்றும் கமிஷனர்கள் பங்கேற்க உள்ளனர்.
அதனால் அவரவர் மாவட்ட மாநகரங்களில் வழக்கு விவரங்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், தண்டனை கிடைக்கப்பெற்ற வழக்குகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட புள்ளிவிவரங்களை எஸ்பி முதல் டிஜிபி வரையில் கடந்த 3 நாட்களாக ஓய்வில்லாமல் சேகரித்து வருகின்றனர்.

இதற்கிடையே முதல்வர் தனிச்செயலாளர் உமாநாத்தும், காவல்துறை பற்றிய குறிப்புகளை எடுத்து வருகிறார்.
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சட்ட ஒழுங்கைப் பற்றி குரலை உயர்த்தி பேச இருப்பதாகவும், மீட்டிங் முடிந்ததும் ஐபிஎஸ் இடமாற்றம் பட்டியல் பெரிதாக வெளிவர இருப்பதாகவும் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.