ADVERTISEMENT

’தணிக்கை சான்றிதழ்’ கேட்டு போராடும் ‘ஜனநாயகன்’- உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

Published On:

| By Mathi

Jananayagan

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடத்தி வரும் விஜய், நடித்துள்ள கடைசி படம் ‘ஜனநாயகன்’. இப்படம் ஜனவரி 9-ந் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கே.வி.என் புரொடக்சன்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், “ஜனநாயகன் திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு கடந்த மாதமே தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தணிக்கைக் குழு படத்தைப் பார்த்து செய்ய சொன்ன மாற்றங்களும் செய்யப்பட்டு திருப்பியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் திரைப்படம் வெளியாக 3 நாட்களே உள்ள நிலையில் இன்னமும் தணிக்கை குழு சான்றிதழ் வழங்கவில்லை. ஆகையால் ’ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இம்மனு மீதான விசாரணை பிற்பகல் 2.15 மணிக்கு நடைபெற உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share